மஹாசிவராத்திரி வரலாறு!!!



அம்பிகை சிவபெருமானை மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. இதையொட்டி, இரவு பொழுதுகளில் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார் அம்பிகை. நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்தார். பூஜையின் முடிவில் , தங்களை வணங்கி பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தால், அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டார்.

சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அனைத்து வகையான பாக்கியங்களையும் வழங்கி முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அம்பிகை வேண்டிக் கொண்டார்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் அருளாசி வழங்கினார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்று கூறப்படுவது உண்டு. ஆனால், சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலால் உருவானதால், சிவனுக்கே உரியதாக கொண்டாடப்படுகிறது.
Powered by Blogger.