திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி மூல மந்திரம்
இந்தப் பதிவில் மிகவும் சக்தி வாய்ந்த பார்வதி மூல மந்திரம் உங்களுக்காக! இந்த மந்திரத்தைக் கூறுவதால் கணவன் ஒற்றுமை மேலோங்கும், குழந்தை பாக்கியம் அருளும், மேலும் திருமணம் தடை பெற்றவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!
ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ
இந்த மந்திரத்தை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாயங்கால வேளையில் பூஜைக்கு முன் சங்கல்பம் செய்து வருவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும். இந்த மந்திரத்தை 90 நாட்கள் தொடர்ந்து செய்து வரவேண்டும். 90 நாட்களும் ஒரே சமயத்தில் சங்கல்பம் செய்ய வேண்டும். அதாவது நீங்கள் மந்திரத்தை மாலை ஐந்து முப்பது மணிக்கு முதன்முதலில் ஆரம்பித்தீர்கள் என்றால் 90 நாட்களும் ஐந்து முப்பது மணிக்கு சங்கல்பம் செய்ய வேண்டும். இதனால் தடைபட்ட திருமணம் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குழந்தைபாக்கியம் ஆகியவை கிடைக்கப் பெறும்.