பவுர்ணமியான இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பவுர்ணமி தினத்தன்று இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் அடைவார்கள்.



ஓம் கமலவர்ணனே போற்றி

ஓம் சித்திரை உருவே போற்றி

ஓம் பயம் போக்குபவனே போற்றி

ஓம் கால உருவே போற்றி

ஓம் அந்தக நண்பனே போற்றி

ஓம் ஞான உருவே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கணக்கனே போற்றி

ஓம் தர்மராஜனே போற்றி

ஓம் தேவலோக வாசனே போற்றி

ஓம் ஆயுள் காரணனே போற்றி

ஓம் மேன்மை தருபவனே போற்றி

ஓம் குழந்தை வடிவினனே போற்றி

ஓம் குளிகன் உருவினனே போற்றி

ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி

ஓம் சித்திரகுப்தனே போற்றி


பவுர்ணமி தினத்தன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலத்தில் மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், அன்பான வாழ்க்கை துணை, நன்மக்கள் செல்வம், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள்.

இந்த நன்னாளில் தெய்வங்களுக்கான விரதங்கள் இருப்பதும் இறைவழிபாடு மற்றும் தான தர்மங்கள் செய்வதும் சாலச் சிறந்ததாகும். இந்த பௌர்ணமி தினத்தன்று மேற்கூறிய ஸ்லோகத்தை துதித்து வழிபடுவதாலேயே ஒருவர் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.

Powered by Blogger.