நவராத்திரி முதல் நாள்- இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நவராத்திரி முதல் நாள்- இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம் || Navaratri First day slokas

நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும்.


துர்க்கை அம்மன்


நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.

அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். அண்டம் என்றால் உலகம். சரம் என்றால் அசைகின்ற பொருட்கள். அசரம் என்றால் அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

 

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ

காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!

ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!

Powered by Blogger.