நவகிரகங்கள் 108 போற்றி

ஒருவரின் வாழ்வில் நடக்கும் நன்மை - தீமைகள் என அனைத்திற்கும் நவகிரகங்களின் இயக்கங்களே காரணம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. நமது துன்பங்கள் விலகுவதற்கு தெய்வங்களின் அருளுடன் நவகிரகங்களின் அருளும் தேவை. நவகிரகங்களுக்குரிய மந்திரங்களை முறையாக சொல்லி, நவகிரக வழிபாட்டினை தொடர்ந்த மேற்கொண்டு வந்தால் நவகிரகங்களால் ஏற்படும் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.


நவகிரகங்கள் 108 Potri


ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி

ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி

ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி

ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி

ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி

ஓம் பொற்ப்பட்டுடையி பொழிவாய் போற்றி

ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி

ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி

ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி

ஓம் மூலாகினியில் முகிழ்ந்த்தாய் போற்றி

ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி

ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி

ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி

ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி

ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி

ஓம் பூதேவி குமரா பெளமா போற்றி

ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி

ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி

ஓம் முக்கோண வடிவிருக்கையாய் போற்றி

ஓம் எண்பரித் தேர்மிசை இயல்பாய் போற்றி

ஓம் தவத்தால் உயர்பதம் அடைந்தாய் போற்றி

ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி

ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி

ஓம் மங்களாம் தரும் மங்கலா போற்றி

ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி

ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி

ஓம் அங்காரகனே அருள்வாய் போற்றி

ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி

ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி

ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி

ஓம் வெண்காந்தள் மலர்விரும்பினாய் போற்றி

ஓம் குதிரைவாகனங் கொண்டோய் போற்றி

ஓம் நால்பரித்தேர்மிசை அமர்ந்தாய் போற்றி

ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி

ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி

ஓம் இளையை மணந்த எழிலே போற்றி

ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி

ஓம் இருக்கு வேததிருந்தாய் போற்றி

ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி

ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி

ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி

ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி

ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி

ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி

ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி

ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றாய் போற்றி

ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி

ஓம் தண்டன் நாடுகாடாய்க்கினாய் போற்றி

ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி

ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி

ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி

ஓம் சூரியபாலா சுபமருள் போற்றி

ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி

ஓம் வில்வடிவாசனம் விளங்கினாய் போற்றி

ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி

ஓம் கருங்கு வளைமலருகந்தாய் போற்றி

ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி

ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி

ஓம் நளனைச் சோதிதாண்டாய் போற்றி

ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி

ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி

ஓம் கலியென்றொரு பெயருடையாய் போற்றி

ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி

ஓம் சிம்மிகை மைந்தா கோளே போற்றி

ஓம் கொடிவடிவமர்ந்த கோளே போற்றி

ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி

ஓம் தென்மேற்றிசையில் திகழ்வாய் போற்றி

ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி

ஓம் உளுந்தும் அருகும் உகர்ந்தாய் போற்றி

ஓம் தென்மேற்கமர்ந்தவனே போற்றி

ஓம் கேதுவே போற்றி

ஓம் கேடறச் செய்பவனே போற்றி

ஓம் செம்மேனியனே போற்றி

ஓம் சிம்மவாஹனனே போற்றி

ஓம் திங்களின் பகையே போற்றி

ஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றி

ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி

ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி

ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி

ஓம் ஓருட லிருகோளானாய் போற்றி

ஓம் தவமேம் பட்ட தலையே போற்றி

ஓம் இராஜபோகம் தரும் இராகுவே போற்றி

ஓம் இராகுவினுடலே கேதுவே போற்றி

ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி

ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி

ஓம் முச்சில் வடிவில் முகழ்ந்தாய் போற்றி

ஓம் செவ்வல் லிமலர் சேர்ந்தாய் போற்றி

ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி

ஓம் அரிவாகனத்தில் அமர்ந்தாய் போற்றி

ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி

ஓம் வடமேற்றிசையில் நின்றாய் போற்றி

ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி

ஓம் தவத்தால் கோள் நிலை பெற்றாய் போற்றி

ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி

ஓம் அரவத்தலையோனே போற்றி

ஓம் வடமேற்குகிலிருப்பவனே போற்றி

ஓம் கொள்விரும்பியே போற்றி

ஓம் நவக்கிரஹ நாயகர்களே போற்றி

ஓம் சூரியனாதிதேவர்கள் போற்றி

Powered by Blogger.