மணிமுடி ஓராறு முருகன் பாடல்

இந்த | manimudi oraaru malar vizhi eeraaru பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள பகுதியில்  பதிவிடவும்… மேலும் இந்தப் பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு போன்ற வார்த்தைகளை உபயோகித்துத் தேடலாம். மேலும் இது போன்ற கடவுள் பாடல்களை படித்து மகிழ எங்கள் தளத்துடன் எப்பவும் இணைந்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


lord-murugan



மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு

பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி

வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (மணிமுடி)

சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து

அவனிக்கு அருள் தரச் செல்லும்பொது

உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது (மணிமுடி)

கயிலையில் தாய் இருக்க கண்முன்னே நீயிருக்க

மயிலுடன் உலவிடும் ஆறு வீடு

உன் மனம் தனில் தொண்டர்க்கு கோடி வீடு

மனந்தனில் தொண்டர்க்கு கோடி வீடு (மணிமுடி)

கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலைவாசல்

துணைவியர் இருபுறம் உன்னைச் சேர

உடன் தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்து கூற

தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்து கூற (மணிமுடி)

Powered by Blogger.