முருகனின் மந்திரங்கள் | Murugan Mantra In Tamil

முருகு என்றால் அழகு. அழகே வடிவானவன் முருகன். கார்த்திகை பெண்கள் வளர்த்த காரணத்தால் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றவர். ஆறு குழந்தைகளாகப் பிறந்து அன்னையின் அரவணைப்பின் போது ஆறுமுகனாகத் தோன்றியவர். கணங்களின் அதிபதியாக விளங்கும் விநாயகரின் தம்பி ஆவார். இவர் சுப்பிரமணியர் என்றும் போற்றப்படுகிறார். 

Lord Murugan Mantra In Tamil


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை. என்று கூறுவார்கள். சூரனை வதம் செய்து வேல் தாங்கி நிற்கும் முருகனை வணங்கினால் வாழ்வில் வரும் துயர்கள் யாவும் நீங்கும். ஓம் எனும் பிரணவத்தை கூறிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் வேலாயுதமாக உள்ளார்.

வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்

ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி!
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்!
==============================
முருகனின் அருளைப் பெற முருகன் போற்றி!!
முருகன் போற்றி 
ஓம் ஆறுமுகனே போற்றி 
ஓம் ஆண்டியே போற்றி 
ஓம் அரன் மகனே போற்றி 
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி 
ஓம் அழகா போற்றி 
ஓம் அபயா போற்றி 
ஓம் ஆதிமூலமே போற்றி 
ஓம் ஆவினன் குடியோய் போற்றி 
ஓம் இறைவனே போற்றி 
ஓம் இளையவனே போற்றி 
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி 
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி 
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி 
ஓம் ஒன்றே போற்றி 
ஓம் ஓங்காரனே போற்றி 
ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
ஓம் ஔவைக்கருளியவனே போற்றி 
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி 
ஓம் கடம்பனே போற்றி 
ஓம் கவசப்பிரியனே போற்றி 
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி 
ஓம் கிரிராஜனே போற்றி 
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் குகனே போற்றி 
ஓம் குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி 
ஓம் குரவனே போற்றி 
ஓம் குருபரனே போற்றி 
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி 
ஓம் சஷ்டி நாயகனே போற்றி 
ஓம் சரவணபவனே போற்றி 
ஓம் சரணாகதியே போற்றி 
ஓம் சத்ரு சங்காரனே போற்றி 
ஓம் சர்வேஸ்வரனே போற்றி 
ஓம் சிக்கல்பதியே போற்றி 
ஓம் சிங்காரனே போற்றி 
ஓம் சுப்பிரமணியனே போற்றி 
ஓம் சுரபூபதியே போற்றி 
ஓம் சுந்தரனே போற்றி 
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி 
ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி 
ஓம் சூழ் ஒளியே போற்றி 
ஓம் சூரசம்ஹாரனே போற்றி 
ஓம் செல்வனே போற்றி 
ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
ஓம் சேகரனே போற்றி 
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி 
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி 
ஓம் சோலையப்பனே போற்றி 
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி 
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி 
ஓம் ஞானோபதேசியே போற்றி 
ஓம் தணிகாசலனே போற்றி 
ஓம் தயாபரனே போற்றி 
ஓம் தண்டாயுதபாணியே போற்றி 
ஓம் தகப்பன் சாமியே போற்றி 
ஓம் திருவே போற்றி 
ஓம் திங்களே போற்றி 
ஓம் திருவருளே போற்றி
ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி 
ஓம் துணைவா போற்றி 
ஓம் துரந்தரா போற்றி 
ஓம் தென்பரங்குன்றனே போற்றி 
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி 
ஓம் தேவசேனாபதியே போற்றி 
ஓம் தேவனே போற்றி 
ஓம் தேயனே போற்றி 
ஓம் நாதனே போற்றி 
ஓம் நிமலனே போற்றி 
ஓம் நிறணந்தவனே போற்றி 
ஓம் பிரணவமே போற்றி 
ஓம் பரப்பிரம்மமே போற்றி 
ஓம் பழனியாண்டவனே போற்றி 
ஓம் பாலகுமாரனே போற்றி 
ஓம் பன்னிரு கையனே போற்றி
 ஓம் பகை ஒழிப்பவனே போற்றி 
ஓம் போகர் நாதனே போற்றி

முருகன் மந்திரம்

சூரசம்ஹாரனாய் விளங்கும் முருகப் பெருமானை முறைப்படி வழிபடுவதன் மூலம் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அல்லல் தரும் தொல்லைகள் யாவும் நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வேலை, திருமணம், குழந்தைப் பேறு, மற்றும் சகல பாக்கியங்களும் கிட்டும்.

முருகன் மூல மந்திரம் : 

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ

எதிர்மறை, எதிர்ப்பு எதிரி, கண் திருஷ்டியை அழிக்கும் முருகன் ஸ்துதி 

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. இந்தப் பாடலை ஜெபம் செய்வதன் மூலம் நம்மை தீமைகள் அணுகாது காத்துக் கொள்ளலாம்.

1.   ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்

2.   ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்

3.   ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்

4.   ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
     ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்

5.   ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
    ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்

6.   ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்

7.   ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்

8.   ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்

9.   ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்

10.   ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
     ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

11.   ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
     ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்

12.   ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
      ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்

13.   ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
     ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்

14.   ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
      ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்

15.   ஓம் இகபர பதயே நமோ நம ஹ
     ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்

16.   ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
     ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்

17.   ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
     ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்

18.   ஓம் நயநய பதயே நமோ நம ஹ
     ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்

19.   ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
     ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்

20.  ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
    ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்

21.  ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
    ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்

22.  ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
    ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

23.  ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
    ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்

24.  ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
    ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்

25.  ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
    ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்

26.  ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்

27.  ஓம் அபேத பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்

28.  ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
    ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்

29.  ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
    ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்

30.  ஓம் மயூர பதயே நமோ நம ஹ
    ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்

31.  ஓம் பூத பதயே நமோ நம ஹ
     ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்

32.  ஓம் வேத பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

33.  ஓம் புராண பதயே நமோ நம ஹ
    ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்

34.  ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்

35.  ஓம் பக்த பதயே நமோ நம ஹ
         ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்

36.  ஓம் முக்த பதயே நமோ நம ஹ
    ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்

37.  ஓம் அகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

38.  ஓம் உகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

39.  ஓம் மகார பதயே நமோ நம ஹ
     ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

40.  ஓம் விகாச பதயே நமோ நம ஹ
   ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்

41.  ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
     ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்

42.  ஓம் பூதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்

43.  ஓம் அமார பதயே நமோ நம ஹ
    ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்

44.  ஓம் குமார பதயே நமோ நம ஹ.
    ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்                                                                                                                                                          
                                                                               
ஓம் முருகா, குரு முருகா, 
அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே 
ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் 
நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

ஆறெழுத்து மந்திரத்தின் அற்புத மகிமை :

ஷண்முக சடாட்சரம் – ஷட் என்றால் ஆறு  - ஆறுமுகப் பெருமானின் சரஹனபவ என்னும் ஆறெழுத்து  மந்திரம் ஜெபத்தால் வாழ்வில் வளமும் நலமும் பெருகும்.
1. சரஹணபவ என தொடர்ந்து ஜபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும
2. ரஹணபவச என தொடர்ந்து ஜபித்து வர செல்வம் செல்வாக்கு பெறகும் 
3. ஹணபவசர என தொடர்ந்து ஜெபித்து வர  பகை, பிணி நோய்கள் தீரும்.
4. ணபவசரஹ என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும்.
5. பவசரஹண என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் நம்மை அவிரும்பும்
6. வசரஹணப என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் 

7. தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

Powered by Blogger.