ராகு - கேதுவை கையில் ஏந்திய படி இருக்கும் சிவ பெருமான்

பொதுவாக சிவாலயங்களில், சிவ பெருமான் லிங்க திருமேனியாக மட்டுமே காட்சி தருவார். மிக அரிதாக ஒரு சில கோவில்களில் மட்டுமே உருவமாக காட்சி தருகிறார். நவகிரகங்களுக்கு அருள் செய்வதற்காக பல்வேறு இடங்களில் சிவன் கோவில் கொண்டிருந்தாலும், அந்த கோவில்களில் எல்லாம் மூலஸ்தானத்தில் சிவனும், நவகிரக சன்னதிகள் தனியாகவும் இருக்கும். ஆனால் சிவனுடன் நவகிரகங்கள் இணைந்து காட்சி தருவது மிக அரிதான காட்சியாகும்.

kanchipuram-mahakaleeswar-temple

அப்படி சிவ பெருமான், பாவ கிரகங்களான ராகு மற்றும் கேதுவுடன் இணைந்து, அவர்களை இரு கரங்களிலும் தாங்கிய படி இருப்பது எங்குமே காண முடியாத திருக்கோலமாகும். அப்படிப்பட்ட இந்த தலத்தில் வந்து ஈசனை துதிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷங்களோ, ராகு - கேதுவால் ஏற்படும் சுப காரிய தடைகளோ ஏற்படாது என்பது நம்பிக்கை.

நவகிரகங்கள் :

ஜோதிட சாஸ்திரப்படி, ராகும் கேதுவும் பாவ கிரகங்கள் என்றும், இரட்டை கிரகங்கள் என்றும் சொல்லப்படுபவை. பூர்வ புண்ணிய கர்ம விவைகளின் அடிப்படையில் பலாபலன்களை கொடுக்கும் கிரகங்களாக இவை உள்ளன. சர்ப்ப கிரகங்களான இவைகளே திருமணத்தடை, புத்திர பாக்கிய தடை ஏற்பட காரணமாக உள்ளன. குறிப்பாக இளம் வயதில் இருப்பவர்களின் வாழ்க்கையில் பல விதமான தோஷங்கள், குறிப்பாக கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் ஏற்பட காரணமாக இருப்பதும் இடைகள் தான்.

ராகு - கேது :

நவகிரகங்களில் சனி பகவானுக்கு அடுத்தபடியாக அனைவரையும் மிரள வைக்கும் கிரகங்கள் ராகுவும், கேதுவும் தான். மனிதன் பாதி, பாம்பு பாதி என உடல் அமைப்பை கொண்ட இந்த கிரகங்கள், அசுரர்கள் ஆவர். பாற்கடலை கடைந்த போது தேர்வர்களை போல் வேடமிட்டு, மகாவிஷ்ணு அளித்த அமிர்தத்தை பருகினர். 

ராகு - கேது




இதனால் தனது சுதர்சன சக்கரத்தைக் கொண்டு இவர்களை இரண்டு துண்டுகளாக வெட்டினார் திருமால். இருந்தும் அமிர்தத்தை உண்டதால் மரணம் இல்லாத வாழ்வை பெற்றன. பிறகு சிவனை நோக்கி தவம் இருந்து, நவகிரகங்களில் ஒருவராக இடம்பிடித்தனர்.

காஞ்சிபுரம் சிவாலயம் :

பொதுவாக ராகுவும், கேதுவும் நவகிரகங்கள் ஒரு கிரகமாக தான் இடம்பிடித்திருப்பார்கள். இவர்களுக்கு என தனி சன்னதி, திருநாகேஸ்வரம் போன்ற குறிப்பிட்ட பரிகார தலங்களில் மட்டுமே உள்ளன. அங்கும் உடலில் ஒரு பாதி மனிதனாகவும், ஒரு பாதி பாம்பாகவும் உள்ள உருவத்தை மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் இருவருமே மனித முகத்துடன் காட்சி தரும் கோவில் ஒன்று தமிழகத்தில் உள்ளது.

காஞ்சிபுரம் மஹாகாளீஸ்வரர் ஆலயம் :

அதிலும் சிவ பெருமானே தனது ஒரு கையில் ராகுவையும், மற்றொரு திருக்கரத்தில் கேதுவையும் தாங்கி இருப்பது போலவும், இவர்களுக்கு அருகில் பார்வதி தேவி அமர்ந்து இருப்பது போன்ற காட்சி அமைந்திருக்கும். இது போன்ற காட்சியை வேறு எங்கும் தரிசிக்க முடியாது. ராகு - கேதுவை தனது திருக்கரங்களில் தாங்கிய படி காட்சி தரும் சிவ பெருமானை, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பின்புறம் இருக்கும் மஹாகாளீஸ்வரர் ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த இந்த கோவிலின் முக்கியமான தனிச்சிறப்பாகும்.

ராகு-கேதுவுடன் ஈசன் :

மஹாகாளீஸ்வரர், மாகாளேஸ்வரர் என பல பெயர்களில் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். மாகாளன் என்ற பாம்பு காளஹஸ்தியில் இருந்து இந்த தலத்திற்கு வந்து வழிபட்டு, முக்தி பெற்றதால் இத்தல இறைவன் மாகாளேஸ்வரர் என அழைக்கப்படுவதாக தல புராணம் சொல்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் ராகு - கேது பூஜித்த தலமாக உள்ளது. இதனால் இது ராகு - கேதுவுக்கு உரிய முக்கிய பரிகார தலமாக விளங்குகிறது.

இத்தலம் காமகோட்டத்திற்கும், காளி கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வந்து வழிபட்டால் திருமணத்தடை, புத்திர பாக்கியத் தடை ஆகியன விலகும். சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

Powered by Blogger.