புரட்டாசி மாதம் சொல்ல வேண்டிய பெருமாள் ஸ்லோகம்

புரட்டாசி மாதம் சொல்ல வேண்டிய பெருமாள் ஸ்லோகம் || Perumal Slokas

புரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.


Perumal Slokas


ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்

மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே

லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய

ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.

வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

பொதுப் பொருள்:

அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே! தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக் கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான்பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன்.

காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.

Powered by Blogger.