கந்தன் வழிபாட்டு ஸ்லோகம்

கந்தன் வழிபாட்டு ஸ்லோகம் || Murugan slokas

 முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.


Om Muruga



கந்தன் வழிபாட்டு ஸ்லோகம்

முருகன்கந்தனும் வருவான் காட்சியும் தருவான்

கவலையை நீ விடுவாய் - மனமே

கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை

 மறவாமல் நீ இருப்பாய் - மனமே.


சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்

செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்

சரவணன் அவனே ஷண்முகன் அவனே

சிவசக்தி வடிவானவன் - முருகன்.


தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்

தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்

தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற

ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்

சாமியாக நின்றான்.


பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்

பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்

பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்

பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்.


கந்தனும் வருவான் காட்சியும் தருவான்

கவலையை நீ விடுவாய் - மனமே

கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை

மறவாமல் நீ இருப்பாய் - மனமே.

Powered by Blogger.